ரஷ்ய மற்றும் உக்ரைன் போரில் இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களை தொடர்புபடுத்தும் மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
ரஷ்ய மற்றும் உக்ரைன் போரில் இந்நாட்டின் இராணுவத்தினர் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருப்பதாக அவர் அங்கு கூறினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, சம்பவம் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்தார்.