வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலஹா பொலிஸ் பிரிவில் நில்லம்ப அணைக்கட்டுக்கு அருகில் உள்ள வீதியில் விசேட அதிரடிப்படை கம்பளை முகாமின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
இதன்படி, கைது செய்யப்பட்டவர்கள் கொலபிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் மற்றும் தெல்தோட்டையைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரும் எனவும் மேலதிக விசாரணைகளுக்காக கலஹா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.