சட்டவிரோதமான முறையில் உதிரிபாகங்களை சேகரித்து தயாரித்து மோட்டார் சைக்கிள் பாகங்களை விற்பனை செய்யும் மோசடி கும்பலை பாணந்துறை வலன ஊழல் தடுப்பு பிரிவினர் சோதனையிட்டுள்ளனர்.
இவ்வாறு பொறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
குருநாகல், வாரியபொல, மஸ்பொத்த ஆகிய பகுதிகளில் இந்த கடத்தல் இடம்பெறுவதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாணந்துறை வலன ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (25) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்படும் 3 இடங்களில் சோதனை நடத்தி 41 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த மையங்களின் உரிமையாளர்களிடம் நடத்திய விசாரணையில், குருநாகல் பகுதியில் வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்யும் தொழிலதிபர் ஒருவரால் மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இந்த விற்பனை நிலையங்களுக்கு அசெம்பிள் செய்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
இந்த நிறுவனங்களில் இருந்து கொள்வனவு செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய முடியாது எனவும் கொள்வனவாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த கடத்தல் 0தொடர்பில் வாரியபொல மற்றும் குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.