உக்ரைன் போர் குறித்து ஈரான் பொய்களை பரப்பி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யாவை ஆதரிப்பதன் மூலம் ஈரான் பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றது என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸ்லெனெஸ்கி தெரிவித்துள்ளார்.
ஈரான் ஒப்புக்கொண்ட பிறகு முதல் முறையாக ரஷ்யாவிற்கு ட்ரோன்களை ஈரான் வழங்கியதாக உக்ரைன் குற்றம் சாட்டியது. ஆனால், ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பதற்கு முன்பே ட்ரோன்கள் வழங்கப்பட்டதாகவும் ஈரான் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் ஈரானின் அறிக்கையை எதிர்க்கும் உக்ரைன், ஒவ்வொரு நாளும் சுமார் 10 ஈரானிய ஆளில்லா விமானங்களை தங்கள் ராணுவம் சுட்டு வீழ்த்துவதாக கூறுகின்றது. ரஷ்யாவுக்கு ஈரான் தொடர்ந்தும் ஆதரவளித்தால், அதன் விளைவுகள் ஆபத்தானதாக இருக்கும் என்றும் உக்ரைன் சுட்டிக்காட்டியுள்ளது.