தினமும் 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் கேட்கும் தேவையற்ற கேள்விகளால் நாடாளுமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுவதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக பாராளுமன்றத்தில் வாய்மூல பதில்களை எதிர்பார்த்து எம்.பி.க்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கான கால அவகாசம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (13) பாராளுமன்றத்தில் வாய்மூல பதில்களை எதிர்பார்த்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.