தேர்தல்களை நடத்துவதில் அரசாங்கம் அரசியல் ரீதியாக தலையிடாது என நீதி விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் உள்ளதா, அல்லது எல்லை நிர்ணய வேலைத்திட்டம் காரணமாக அது பிற்போடப்படுமா என கண்டியில் ஊடகவியலாளர்கள் கேட்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, கல்வி இராஜாங்க அமைச்சர் எஸ்.அரவிந்த குமார், ஹட்டன் பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தங்கள் தற்போது இல்லை என தெரிவித்தார்.