பண்டிகைக் காலங்களில் சுமார் 20 இலட்சம் முட்டைகள் தேவைப்பட்ட போதிலும், இதுவரை அந்தத் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும். தற்போதைய சூழ்நிலை காரணமாக பண்டிகைக் காலங்களில் பல கொண்டாட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இதனால் நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் பல பகுதிகளில் லாரிகள் மூலம் முட்டை 55 ரூபாய் விலையில் விற்பனை செய்த போதிலும் நேற்று மீண்டும் முட்டையின் விலை 60 ரூபாயை தாண்டியுள்ளது
மேலும், நேற்று அம்பலாந்தோட்டை சத்திபொலவில் முட்டை ஒன்று 70 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதோடு,, நாடளாவிய ரீதியில் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளிலும் ஒரு முட்டை 57 ரூபாவில் இருந்து விற்பனை செய்யப்படுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.