இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவினை பதவியிலிருந்து நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் ஜூன் மாதம் 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இதன்படி,குறித்த மனு தொடர்பாக எழுத்துப்பூர்வ பேச்சுக்கள் இருந்தால், அவற்றை மே 18ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
அத்தோடு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும், இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய பிரஜை என்பதால், அவர் பாராளுமன்றத்தில் அமர்ந்திருப்பது நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரானது என மனுதாரரான சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்துள்ளார்.