தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றாத தமது அமைச்சின் அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதன்படி,தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகளுக்கு இன்னும் ஒரு மாதத்திற்குள் தீர்வு காணப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.