பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு இடையில் பல துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
இதன்படி, முதலீடு, விவசாயம், மீன்பிடி, மருந்து, கடல்சார் உறவுகள் மற்றும் உயர்கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் டாக்காவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் பதவியை விட்டு வெளியேறும் பேராசிரியர் சுதர்சன் டி.எஸ்.செனவிரத்னவை பங்களாதேஷ் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக தெரிவியவருகின்றது.
அத்தோடு, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, பங்களாதேஷின் 90% வளர்ச்சித் திட்டங்கள் உள்ளூர் வளங்களால் நிதியளிக்கப்படுகின்றன என்றும், COVID-19 தொற்றுநோய் காரணமாக, நாடு முழுவதும் வளர்ச்சி செயல்முறை ஓரளவு சீர்குலைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளதுடன் பிரதமர் தலைமையில் பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள சமூக பொருளாதார அபிவிருத்திக்கு பேராசிரியர் சுதர்சன் டி.எஸ்.செனவிரத்னவும் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.