அநுராதபுரம் கபிதிகொல்லேவ பிரதேசத்தில் நேற்றிரவு ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலையை கட்டுப்படுத்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
காட்டு யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று குறித்த இடத்திற்கு சென்ற போது, அந்த இடத்தில் கிராம மக்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கிருந்த நபரொருவரின் தாக்குதலில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக அவ்விடத்திலிருந்த பொலிஸ் அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.