சுற்றுலா விசா மூலம் மலேசியாவில் வேலைக்காக ஆட்களை கடத்துவது தொடர்பான தகவல்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கண்டுபிடித்துள்ளது.
அதன்படி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விமான நிலைய பணியகம் மற்றும் விசேட புலனாய்வு பிரிவினர் இணைந்து அந்த கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
அந்த நடவடிக்கைகளின் கீழ், 23 பேர் சுற்றுலா விசா மூலம் மலேசியாவிற்கு வேலைக்காக செல்ல முயன்றதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.