இலங்கைக்கான ரஷ்யா தூதுவர் யூரி மேட்டேரி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோனை நேற்று (டிசம்பர் 05) சந்தித்தார்.
இச்சந்திப்பானது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கொழும்பு அனர்த்த முகாமைத்துவ நிலைய வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
.மேலும், ரஷ்யா தூதுவர் வருகை தந்த போது அவரை மிகவும் அன்புடன் வரவேற்ற இராஜாங்க அமைச்சர், அவருடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.
இதனைத்தொடர்ந்து,இந்த சிநேகபூர்வ கலந்துரையாடலில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இராணுவ இராஜதந்திர உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு ரஷ்யா தூதுவருக்கு நினைவு பரிசும் வழங்கப்பட்டது.
மேலும், ரஷ்யா தூதரகத்தின் இராணுவ, விமானம் மற்றும் கடற்படை ஆலோசகர் கர்னல். அலெக்ஸி பொண்டரேவ், பாதுகாப்பு அமைச்சின் உதவி இராணுவ இணைப்பு அதிகாரி கேணல் துசித பண்டார மற்றும் சிரேஷ்ட மேலதிக செயலாளர் (பாதுகாப்பு) ஹர்ஷ விதானராச்சி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.