வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சில கொவிட் சட்டங்கள் தளர்த்தப்பட்டுள்ளன.
அதன்படி, இலங்கைக்கு வருவதற்கு முன்னர் PCR அல்லது ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்ற சட்டம் இன்று முதல் நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வருபவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானால் அவர்களை 07 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.