நாட்டிற்கு அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதால், அரிசி இறக்குமதியை இடைநிறுத்துமாறு நேற்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதியை சந்தித்த போது விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், 2023ஆம் ஆண்டு நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என கடந்த ஒரு வருடத்தில் 8 இலட்சம் ஹெக்டேயர் பயிர்ச்செய்கைக்கு இலக்கான 08 இலட்சம் ஹெக்டேயரில் ஏற்கனவே 6 இலட்சத்து 75,600 ஹெக்டேயரில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள விவசாயிகள் உழைத்துள்ளமையால் அமைச்சர் ஜனாதிபதிக்கு ய்வகோரிக்கையை விடுத்துள்ளார்.
இதன்படி, இலங்கைக்கான அரிசி இறக்குமதியை இடைநிறுத்துவதற்கான வர்த்தமானியை வெளியிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.சமரதுங்கவுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு, 2021 ஆம் ஆண்டு பிரதான பருவத்தில் நெற்செய்கை தோல்வியடைந்ததன் காரணமாக இலங்கையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து அரிசியை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு நுகர்வோர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, இவ்வருடம் செப்டெம்பர் மாத இறுதிக்குள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசியின் அளவு 75,288 மெற்றிக் தொன்களாகும். அதற்காக செலவிடப்பட்ட தொகை 73,627 மில்லியன் ரூபாவாகும்.
மேலும், நெல் சந்தைப்படுத்தல் சபையினால் நெல் கொள்வனவு செய்வதற்கு 2000 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய போதிலும், அரச வங்கிகள் ஊடாக பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே கடந்த பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட 7,072 மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான நிதியில் இருந்து 850 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
எனினும், யாழ் பருவத்தில் விவசாயிகளுக்கு யூரியா உரம் வழங்கப்படுவதால், சில பகுதிகளில் எதிர்பார்த்த இலக்கை விட அதிக மகசூல் பெற முடிந்துள்ளது. மேலும் சில பிரதேசங்களில் விவசாயிகள் மூன்று பருவ நெல் அறுவடையை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எனவே மேலும் அரிசியை இறக்குமதி செய்வதன் மூலம் விவசாயிகள் விளைந்த அரிசியை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.