வெளிநாட்டு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்த ஆண் மற்றும் பெண் சந்தேக நபர்கள் இருவரை ஹலவத்தை பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற 06 முறைப்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் வெளிநாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி 59 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்கள் ஹலவத்த பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞரும் 45 வயதுடையர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி,சந்தேக நபர்களை ஹலவத்தை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.