மொரகஹஹேன, ஒலோபொடுவ மற்றும் நவம் மாவத்தை பிரதேசங்களில் ஒற்றைச் சக்கர மோட்டார் சைக்கிள் மற்றும் இரு சக்கர முச்சக்கரவண்டிகளில் பயணித்த 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேகநபர்களை ஹொரண நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர், ஒவ்வொருவருக்கும் தலா 25,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இவர்களின் சாரதி அனுமதிப்பத்திரத்தை ஒரு வருடத்திற்கு இடைநிறுத்தவும் ஹொரணை நீதவான் சந்தன கலன்சூரிய உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சந்தேகநபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை தங்களுடைய காவலில் வைக்குமாறு மொரகஹஹேன பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் மொரகஹஹேன மற்றும் ஹொரணை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.