பல வருடங்களின் பின்னர் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி இன்று காலை இந்தியாவின் சென்னையில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், புதிய விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், வாரத்தின் ஒவ்வொரு ஞாயிறு, செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் இந்தியாவில் இருந்து பலாலிக்கு விமான சேவைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.