எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் தமது கட்சி தற்போது ஆலோசித்து வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
மேலும், ஹொரிவில பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே சபை உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்தோடு, பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளத் தயாராகி வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேனவிடம் கேள்வியினை எழுப்பிஇருந்தது.
இதேவேளை, நேற்று பிற்பகல் அனுராதபுர விகாரைக்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் கேட்டறிந்தனர்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அத்தோடு, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவிற்கு விஜயம் செய்து நாடு திரும்பிய பின்னர் ஜனாதிபதியை சந்திப்பது இதுவே முதல் தடவை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருவருக்குமிடையில் ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாக கலந்துரையாடல் இடம்பெற்றதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.