நான்கு தூதுவர்கள் மற்றும் இரண்டு நிரந்தரப் பிரதிநிதிகள் நியமனத்துக்கு நாடாளுமன்றத்தின் உயர் அதிகாரிகள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, பிரான்சுக்கான புதிய இலங்கை தூதுவராக நிரோஷனி மனிஷா டயஸ் அபேவிக்ரம குணசேகர மற்றும் ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாச்சார அமைப்பின் நிரந்தர பிரதிநிதியாக நிரோஷனி மனிஷா டயஸ் அபேவிக்ரம குணசேகரவை நியமிப்பதற்கு குழு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக ஹிமாலி சுபாசினி டி சில்வா அருணாதிலகவை நியமிப்பதற்கும் உயர் அதிகாரிகள் குழு அங்கீகரித்துள்ளது.
ஜேர்மனிக்கான புதிய இலங்கை தூதுவராக லங்கா வருணி முத்துக்குமாரனையும் ஜோர்தானுக்கான புதிய இலங்கை தூதுவராக ஜே.ஏ.டி.எஸ் பிரியங்கிகா விஜேகுணசேகரவையும் நியமிப்பதற்கு குழு அங்கீகரித்துள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
வியட்நாமுக்கான புதிய இலங்கைத் தூதுவராக சஜீவ உமங்க மெண்டிஸை நியமிப்பதற்கும் உயர் அதிகாரிகள் குழு அனுமதி வழங்கியுள்ளது.