அனைத்துப் பாடசாலைகளிலும் கற்றல் சூழலை பேணுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இன்று (19) கல்வி அமைச்சில் இடம்பெற்றது.
மேலும், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பாடசாலை விவகாரங்கள் தொடர்பான பல தரப்பினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்போது, பாடசாலை வளாகத்தை இனிமையான இடமாகவும், பிள்ளைகள் மன திருப்தியுடன் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய இடமாகவும் மாற்றுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அத்தோடு, தற்போதுள்ள சுற்றறிக்கைகளில் மேலதிக கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் குறித்தும் அதிபர்களுக்கு தெரியப்படுத்துவதுடன் எதிர்காலத்தில் மாணவர்களின் பைகளை பரிசோதிப்பது அவசியமானால் ஆசிரியர்களின் மாணவர் தலைவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பிரதி நிதிகள்பங்களிப்புடன் அதிபர்களால் மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.