ஜனவரி மாதம் மின் கட்டணத்தை அதிகரிப்பது கட்டாயம் எனவும், ஜனவரி 02ஆம் திகதி அமைச்சரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் மின்சார அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, டிசம்பர் 24, 25, 31 மற்றும் ஜனவரி 01, 02 ஆகிய திகதிகளில் மின்வெட்டு இருக்காது என மின்சார அமைச்சர் மேலும், தெரிவித்துள்ளார்.
அத்தோடு, , ஜனவரி மாதம் முதல் 10 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மின் பொறியாளர்கள் தெரிவித்திருப்பது முற்றிலும் பொய்யானது என மின்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் கருத்து வெளியிடும் மின் பொறியியலாளர் சங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.