வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பில் நான்கு தொலைபேசி இலக்கங்களின் பகுப்பாய்வு அறிக்கைகளை பெற்றுக்கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், குறித்த தொலைபேசி இலக்கங்களுக்கு பெறப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்பட்ட அழைப்புகள் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கைகளை பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் இவ் உத்தரவு கிடைத்துள்ளது.
இதன்படி, பொரளை பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன ககவல, சம்பந்தப்பட்ட நான்கு தொலைபேசி இலக்கங்களுக்கு பெறப்பட்ட அழைப்புகளின் விபரங்களை பொலிஸாருக்கு வழங்குமாறு தொலைபேசி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பில் அவரது மனைவி உட்பட பல தரப்பினரிடம் வாக்குமூலம் பதிவு செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.