
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, வவுனியா, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் வசிக்கும் 41,500 ரூபா மாத வருமானத்துடன், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் ஏஜென்சி (USAID) ஆதரவுடன் 07 மாவட்டங்களில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட அரிசி விவசாயக் குடும்பங்களுக்கு 15,000 ரூபா. வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்
மேலும், விவசாய அமைச்சு, விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடத்திய கலந்துரையாடல்களின் பலனாக, அந்த மாவட்டங்களில் உள்ள குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு இந்தத் தொகையை வழங்குமாறு USAID நிறுவனமும் அறிவுறுத்தியுள்ளது.
இந்த தொகை ஜனவரி மாதத்தில் இரண்டு தவணைகளாக வழங்கப்படும் எனவும் விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எச். எல். அபேரத்ன தெரிவித்தார்.
அத்துடன், ஆசிய அபிவிருத்தி வங்கியானது, நாட்டிலுள்ள 12 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு 08 பில்லியன் ரூபாவை வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடதக்க விடையமாகும் .
இருகன்பய, 10,000 முதல் 20,000 ரூபா வரை விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளதுடன், முதற்கட்டமாக 04 பில்லியன் ரூபாவை இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் குறித்த விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கொடுப்பனவுகள் எதுவும் விவசாயிகளிடமிருந்து மீள அறவிடப்பட மாட்டாது எனவும், இந்த சர்வதேச உதவிகள் அனைத்தும் எமது நாட்டு விவசாயிகளுக்கு இலவச மானியமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சர் மேலும்,தெரிவித்தார்.