கட்டாய விடுமுறையில் உள்ள 19 பெற்றோலிய தொழிற்சங்க பிரதிநிதிகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று சந்தித்துள்ளார்.
மேலும், விஜேராமவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதோடு குறித்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகேவும் கலந்துகொண்டுள்ளார்.
இதன்படி, கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், தொழிற்சங்க பிரதிநிதிகளின் கட்டாய விடுமுறை குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மின்சக்தி அமைச்சருடன் கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பொது முற்போக்கு ஊழியர் சங்கத்தின் பெற்றோலியக் கிளையின் தலைவர் பந்துல சமன் குமார, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், இலங்கையில் எரிபொருளை விநியோகிக்கும் உரிமையை வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்குவது உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து தொழிற்சங்கத் தலைவர்கள் அண்மையில் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இதன்படி, எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்த நான்கு பெற்றோலிய தொழிற்சங்க தலைவர்கள் உட்பட 20 பேரை கடந்த 29ஆம் திகதி முதல் கட்டாய விடுமுறையில் அனுப்ப பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் மற்றும் களஞ்சிய முனைய நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடதக்கவிடையமாகும்.