கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக தயார்படுத்தப்பட்டிருந்த வாகன அணிவகுப்பின் போது மாணவர்கள் குழுவொன்று பயணித்த ஜீப் விபத்துக்குள்ளானதில் இரு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 08 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும், பதுளை பிரதேசத்தில் இரண்டு பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக தயார்படுத்தப்பட்டிருந்த வாகன பேரணியின் போது குறித்த அசம்பாவித சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, சம்பவத்தில் 13ஆம் ஆண்டு மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.