புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டால், இலங்கை மீதான பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறு விளைவிக்கும் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை குலைக்கும் மோசடி மற்றும் ஊழலை நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட வேண்டும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், லஞ்சம் மற்றும் கொமிஷன் பெறுவதை நிறுத்துவது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் சிறிமல் அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி, உலகின் பிற நாடுகள் பின்பற்றும் புதிய தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் மோசடி மற்றும் ஊழலை நிறுத்த முடியும் எனவும் தேசிய மட்டத்தில் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமெனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைகள் பிரிவின் பேராசிரியர் சிறிமல் அபேரத்ன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.