2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் புழு சேதம் மற்றும் நெற்பயிர் சேதத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 657 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை அறிவித்துள்ளது.
இதன்படி, 2021 ஆம் ஆண்டுக்கான பயிர் சேதத்திற்கான இழப்பீடு ஏற்கனவே ஒரு குழு விவசாயிகளுக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2021 பருவத்தில் 25 மாவட்டங்களில் 31,613 விவசாயிகள் பயிர் சேதத்தை சந்தித்துள்ளதாகவும் 42,934 ஏக்கர் சாகுபடி நிலம் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது,
அத்தோடு, கடந்த பருவத்தில் விவசாயிகளின் அறுவடையில் குறைவு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.