2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனுக்களை சமர்ப்பித்த அரசியல் உரிமையுடைய அரச அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, மூன்றாவது நாள் நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதோடு மார்ச் 09 முதல் ஏப்ரல் 25 வரை குறித்த அதிகாரிகளுக்கு அடிப்படை சம்பளம் வழங்கப்படும் என குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.