மொரட்டுவ பிரதேசத்தில் தனியார் நிறுவனமொன்றில் 33 இலட்சம் ரூபாவை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, அதே நிறுவனத்தில் பணியாற்றிய விற்பனை பிரதிநிதி கைது செய்யப்பட்டதோடு நிறுவனத்துக்கு சொந்தமான பொருட்களை குறைந்த விலைக்கு விற்று பணத்தை செலவு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு, காணாமல் போனவர் தொடர்பில் விசாரணை நடத்த மொரட்டுவ நீதவான் நீதிமன்றம் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியிருந்த நிலையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபரை அவரது சகோதரி ஊடாக கைது செய்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.