பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவரின் கைத்தொலைபேசி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
இதன்படி. சம்பவம் பதிவாகியதையடுத்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதிவான பாதுகாப்பு கமெரா காட்சிகள் மீள் ஆய்வு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தச் சம்பவத்திற்கான எந்த ஆதாரமும் பாதுகாப்பு கேமராக்களில் பதிவாகவில்லை எனவும் முறைப்பாடு செய்த நபர் இந்த நாட்டிற்கு வருவதற்கு முன்னர் மத்திய கிழக்கு நாட்டில் உள்ள குடிவரவு விமான நிலையத்தில் தங்கியிருந்துள்ளார்.
அத்துடன், குறித்த நபரின் கையடக்கத் தொலைபேசி விமான நிலையத்தில் தற்போதுள்ள பாதுகாப்பு விதிமுறைகளின் அடிப்படையில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு விமான சேவை நிறுவனம் எழுத்து மூலம் தமக்கு அறிவித்துள்ளதாக விமான நிலைய தலைவர் மேலும் தெரிவித்தார்.