சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரிட்டனுடனான பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டதாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது என இந்தியா தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த செய்திகள் ஆதாரமற்றவை என இந்திய அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, லண்டனில் உள்ள இந்தியா உயர் ஸ்தானிகராலயம் மீதான தாக்குதலால் இந்தியா-பிரிட்டன் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை முறிவடைந்துள்ளதாக பிரித்தானிய நாளிதழ் ஒன்று அண்மையில் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தை ஜூன் 17 அன்று தொடங்கிய போதிலும் இதுவரை குறித்த ஒப்பந்தம் தொடர்பாக இறுதி உடன்பாட்டை எட்டவில்லை.