போலி ATM அட்டைகளை பயன்படுத்தி பணத்தை திருடிய சந்தேகநபர் ஒருவர் நுகேகொட குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, போலி ஏ.டி.எம் அட்டைகளைப் பயன்படுத்தி பணம் திருடப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக பிலியந்தலாவை, கொட்டாவ, தெஹிவளை, மிரிஹான மற்றும் மஹரகம ஆகிய பொலிஸ் நிலையங்களில் கிடைக்கப்பெற்ற 50 முறைப்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் இது தெரியவந்துள்ளது.
அத்தோடு, சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்த 15 போலி ஏடிஎம் அட்டைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.