கெஸ்பேவ பண்டாரகம வீதியில் விதானன் பெருவ வளைவில்- சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து கிடந்த நிலையில் நபரொருவரின் சடலம் இன்று (14ஆம் திகதி) அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, பொரலஸ்கமுவ வெவ வீதியில் வசிக்கும் 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாகவும் பண்டாரகமவிலிருந்து கெஸ்பேவ பண்டாரகம வீதியில் விதானன் பெருவ வளைவில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது வீதியோரத்தில் சடலம் விழுந்து கிடந்ததற்கான அடையாளங்கள் வீதியில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு, இறந்தவரின் முகத்தில் பலத்த காயங்கள் மற்றும் காதில் இருந்து ரத்தம் வழிந்ததுள்ளதாகவும் மோட்டார் சைக்கிளில் விபத்துக்குள்ளானதில் குறித்த மரணம் நடந்ததா? இல்லை என்றால் மோட்டார் சைக்கிள் மீது வேறு வாகனம் மோதியதா?அல்லது மரணம் வேறொரு சம்பவத்தினால் ஏற்பட்டதா என்பது குறித்து பல கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும். மவுண்ட் குற்றப்பிரிவு ஆய்வக அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கெஸ்பேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.