இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் புதிய (XBB.1.16) கோவிட் வகை காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறைகள் தெரிவிக்கின்றன.
இதன்படி, இந்தியாவில் இன்று (14) 11,109 புதிய கோவிட் நோயாளிகள் பதிவாகியுள்ளதோடு இதுவே 236 நாட்களில் பதிவான அதிகூடிய தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை 49,622 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாகவும் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்களைத் தொடர்ந்து எடுக்குமாறும் அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் மக்களுக்குத் தெரிவித்து வருகின்றனர்.