இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பயணித்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்படி, வாகனத்தில் பயணித்த அமைச்சரும் மற்றுமொரு நபரும் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த வாகனம் அவிசாவளை – கேகாலை வீதியில் கஹடஸ்தன்ன பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.