சமகி ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டு அரசாங்கத்தில் இணைந்து கொள்ளத் தயாராக இருப்பதாக வெளியான செய்தியை முற்றாக நிராகரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதன்படி, அரசாங்கத்திற்கு ஆதரவான குழுக்கள் இவ்வாறான செய்திகளை உருவாக்கி பரப்பி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
அத்தோடு, தற்போதைய அரசாங்கம் நாட்டை மோசமான பாதாளத்திற்குள் தள்ளுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சமகி ஜன பலவேகய குழுவொன்று அரசாங்கத்தில் இணையப்போவதாக அரசாங்க ஆதரவு குழுக்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்ததோடு, அந்தக் கும்பலின் சமீபத்திய உத்தியாக, சமகி ஜன பலவேகயக் குழுவொன்று பதவிக்காக அரசாங்கத்தில் இணையப்போவதாக போலிச் செய்திகளைப் பரப்புகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.