சூடானில் நிலவும் மோதல் சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு பல நாடுகள் அறிக்கை வெளியிட்டுள்ளன.
இதன்படி, வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அமெரிக்கா இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், ரஷ்யா, இங்கிலாந்து, சீனா, ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா, உகாண்டா, கென்யா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் உயர் அதிகாரிகள் சூடானில் எழுந்துள்ள மோதல் சூழ்நிலையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருமாறு பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே, சூடான் நிலவரத்தால் தலைநகர் கார்டூம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் மக்களுக்கு உணவு, தண்ணீர் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு தங்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீரை வழங்குமாறும் அந்தந்த பிரதேச மக்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் சூழ்நிலை காரணமாக 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.