தற்போதைய வெப்பமான காலநிலை காரணமாக மன உளைச்சல் உள்ளிட்ட மனநோய்கள் அதிகரிக்கலாம் என சிறப்பு மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மக்கள் வன்முறைக்கு ஆளாக நேரிடும் என்று
மக்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடலாம் என சுட்டிக்காட்டும் மனநல மருத்துவர் ரூமி ரூபன், இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மனநோய்களுக்கு மருந்து உட்கொள்பவர்களுக்கு தாகம் கூடுவதாகவும், இதனால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மனநல மருத்துவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிக வெப்பமான காலநிலை காரணமாக குழந்தைகளின் சிந்தனைத்திறன் குறைவடையக்கூடும் எனவும் இதனால் பிள்ளைகளுக்கு கல்விச் சிக்கல்கள் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.