தேசிய கண் வைத்தியசாலையில் கண் நோயாளர்களுக்குப் பயன்படுத்தப்பட்டதன் பின்னர் சிக்கல்களை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் Prednisolone என்ற மருந்து தொடர்பில் சுகாதார அமைச்சு தரச் சோதனை நடத்த வேண்டும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த மருந்து காரணமாக கண் வைத்தியசாலையில் அனைத்து பொது சத்திரசிகிச்சைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் தெரிவித்தார்.
மேலும், குறித்த மருந்து அகற்றப்பட்டதன் பின்னர் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கண் வைத்தியசாலையின் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பும் என நம்பப்படுகின்றது.