நோர்வூட், போர்திவத்தை பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
இதன்படி, மாணிக்கக்கல் அகழ்வதற்கு பயன்படுத்தப்பட்ட சில உபகரணங்களையும் சந்தேகநபர்களிடம் இருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நோர்வூட் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது,
அத்தோடு, இவர்களை எதிர்வரும் 13ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கூறப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.