கடந்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு பின்னர் ஓய்வுபெற்ற ஆசிரியர்களும் 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கான விண்ணப்பங்களை அனுப்ப முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கான ஆய்வாளர்கள் ஆட்சேர்ப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் ஆன்லைன் முறை மூலம் மேற்கொள்ளப்பட்டும் மே 2 ஆம் திகதி முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உயர்தரப் பரீட்சையின் எஞ்சியுள்ள நடைமுறைப் பரீட்சைகளை விரைவில் ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு உள்ளூர், இந்திய நடனம் மற்றும் இசை தொடர்பான பாடங்களில் நடைமுறைச் சோதனைகள். இன்னும் பல பாடங்களின் நடைமுறைத் தேர்வுகள் தற்போது முடிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அத்தோடு, 2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான நடைமுறைப் பரீட்சைகள் ஜூன் 8ஆம் திகதிக்குப் பின்னர் நடத்தப்படும் என பரீட்சை திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், தொழில் ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதன் காரணமாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் இதுவரை உயர்தர விடைத்தாள் பரீட்சைக்கான மதிப்பெண் முறை குறித்த கலந்துரையாட வரவில்லை ஏனவும் அண்மையில் பல தரப்பினரும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடம் மாணவர்களினைப் பற்றி சிந்தித்து அதில் பங்குபற்றுமாறு கோரிக்கை விடுத்த்துள்ளனர்.
ஆனால், தங்களது பிரச்னைகளுக்கு சாதகமான பதில் அளித்தால், உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணியில் இணைவோம் என பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்ததுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.