இலங்கையில் இந்த வருடம் 602,247 ஹெக்டேயர் நெற்செய்கைக்கான இலக்கு எதிர்பார்க்கப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, விவசாய அமைச்சில் நடைபெற்ற யாழ் பருவத்தில் நெற்செய்கைக்கு தேவையான விவசாய உள்ளீடுகள் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2022யில் 512,000 ஹெக்டேர் அதிக அளவான நெல் நடவு செய்யப்பட்டிருந்த போதிலும் 2023 ஆம் ஆண்டுக்கான பருவத்தில் பயிர்ச்செய்கை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலத்தின் அளவைக் கருத்தில் கொண்டு, இதுவரையில் எமது நாட்டில் பயிரிடப்பட்ட அதிக நெற்பயிர்கல் பயிரிடப்பட்ட வருடமாக அமையும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்தோடு, யூரியா, சேற்று உரம், பூந்தி உரம் உள்ளிட்ட அனைத்து வகையான உரங்களையும் விவசாயிகளுக்கு வழங்க விவசாய அமைச்சு ஏற்பாடுகளைச் செய்துள்ளதால், இம்முறை வெற்றிகரமான அறுவடையைப் பெற முடியும் எனவும் நெல் சாகுபடிக்கு தேவையான அடிப்படை உரமான டிஎஸ்பி அல்லது மண் உரம் அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், தற்போதைக்கு தனியார் துறையினரும் உரங்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும், அரசால் வழங்கப்படும் உரங்கள் மட்டுமின்றி விவசாயிகளுக்கு தேவையான உரங்களை வாங்குவதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.
எனினும், இயற்கை அனர்த்தம் அல்லது பூச்சி சேதம் போன்ற தொற்றுநோய்கள் ஏற்படாத பட்சத்தில், இந்த பருவத்திலும் அதிக மகசூல் பெற முடியம் எனவும் இவ்வருடம் வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது என்றும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த ஆண்டு நெல் சாகுபடிக்கு உரம் கொள்முதல் செய்வதற்கான மானியமாக ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாவும், இரண்டு ஹெக்டேருக்கு 40 ஆயிரம் ரூபாவும் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு குறித்த பணம் அனைத்து விவசாயிகளின் கணக்குகளிலும் விவசாயிகள் மேம்பாட்டுத் துறை மூலம் வரவு வைக்கப்படுவதக்கவும் விவசாய அமைச்சர் தெரிவித்தார்.