ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மருத்துவ மாணவர் பரிமாற்றம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (02) ரஷ்யாவின் குர்ஸ்க் அரச மருத்துவக் கல்லூரியின் தூதுக்குழுவிற்கும் சுகாதார அமைச்சர் கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்லவிற்கும் இடையில் இடம்பெற்றது.
இதன்படி, ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனிதா ஏ. லியனகே உள்ளிட்ட ரஷ்யா பிரதிநிதிகள் சுகாதார அமைச்சர் கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்லவை சந்தித்த வேளையில் ரஷ்யாவில் பிந்தைய முனைவர் படிப்பு உட்பட மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை தொடர்பான பல விடையங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்தோடு, நவீன தொழில்நுட்ப ஆய்வுகூட வசதிகளின் கீழ் மரபணு பொறியியல் மருத்துவம், இரசாயன மருத்துவம் போன்ற பிந்தைய கலாநிதிப் படிப்புகளை கற்க இலங்கை மருத்துவ மாணவர்களும் அழைக்கப்படவுள்ளதகவும் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்களின் பின்னர் இது தொடர்பாக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும்.என நம்பிக்கையுடன் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசேல குணவர்தன மருத்துவ சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஜி.விஜேசூரிய ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.