கோதுமை மாவிற்கு வழங்கப்பட்டு வந்த மூன்று ரூபா சுங்க வரி விலக்கு நீக்கப்பட்டுள்ளது
இதன் காரணமாக கோதுமை மாவின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
இதன்படி, அவிசாவளை பிரதேசத்தில் இன்று (07) பிற்பகல் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர், கோதுமை மா மீது மீண்டும் சுங்க வரி விதிப்பதன் மூலம், 90 சதவீத வாழ்வாதார நெல் விவசாயிகளை பாதுகாக்க கோதுமை மாவின் விலையை நிர்வகிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.