சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் பாதுகாப்பிற்காக சமூக பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்தவும், உலக வங்கியில் இருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் முன்வைத்த பிரேரணையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட அரச வைத்தியசாலைகளில் கட்டண வார்டு வசதிகளை அறிமுகப்படுத்தும் யோசனைக்கும் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.