
மினுவாங்கொடை, ஓபாத பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய மைனர் சிறுமியே காதலனால் கடத்தப்பட்டுள்ளார்.
இதன்படி, குறித்த இளைஞனும் ஓபாட பிரதேசத்தில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுவதோடு குறித்த நபருக்கும் சிறுமிக்கும் இடையே காதல் உறவு இருந்து வந்ததுடான் சிறுமி உறவை முறித்துக் கொண்டதால் குறித்த வாலிபர் தொடர்ந்தும் மிரட்டி வந்துள்ளார்.
இதன் காரணமாக சிறுமியை மொனராகலை பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைக்க குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த நிலையில் குறித்த இளைஞன் வீட்டுக்குள் நுழைந்து சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இது தொடர்பில் வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், இதுவரை சிறுமி தொடர்பில் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.