தற்போது முன்வைக்கப்பட்டுள்ள “இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்திற்கு” பதிலாக உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளுக்கு இணங்க புதிய வரைவை சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்படி, பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் கடிதம் ஒன்றை கையளித்ததோடு வணக்கத்திற்குரிய அதுரலியே ரதன தேரர், உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, கெவிந்து குமாரதுங்க, ஜயந்த சமரவீர, மொஹமட் முஸம்மில், வீரசுமன வீரசிங்க மற்றும் அசங்க நவரத்ன ஆகியோர் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.