இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு தெற்கே உள்ள கடலில் சீனா மீன்பிடிக் கப்பல் விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் விபத்தின் போது கப்பலில் 39 பணியாளர்கள் இருந்ததாகவும் அவர்களில் 17 சீனா பிரஜைகளும், 17 இந்தோனேசியா பிரஜைகள் மற்றும் 05 பிலிப்பைன்ஸ் பிரஜைகள் அடங்குவர்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, .அவர்களை மீட்க ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளிடம் சீனா உதவி கோரியுள்ளதுடன் இலங்கையில் இருந்து சுமார் 700 கடல் மைல் தொலைவில் இடம்பெற்ற இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது தொடர்பில் இலங்கை இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
இதற்கான காரணமாக இலங்கையில் இருந்து அந்த இடத்தை அடைய இரண்டு நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்படுகின்றது.