இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சில குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற அவுஸ்திரேலியா பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்படி, 4 பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளில் 3 கைவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2022ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியின் போது, அங்குள்ள பெண் ஒருவருடன் நட்பாக பழகிய குணதிலகா, அவரது அனுமதியின்றி பலாத்காரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டதினைத் தொடர்ந்து வழக்கு சிட்னியில் உள்ள டவுன் சென்டர் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேலும், சிட்னி பொலிஸார் எடுத்த நடவடிக்கை தொடர்பான உண்மைகளை சட்டத்தரணிகள் வெளிப்படுத்தியதோடு குறித்த வழக்கு ஜூலை 13 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படவுள்ளது.